காதலின் அழகே !!!!!!!!
ஒரு சிறு புன்னகையால்
என்
மனதில் காதல் நகையை
அணியவைத்தாய்.
சிறு விழிகளின் பார்வை
காதல்
மொழியை படிக்க தூண்டிற்று.
சிறு விரல்களின் அசைவுகள்
என்
திசை மாற்றியது .
வீசிய பார்வையால்
என்
நெஞ்சத்தை பிளந்தாய் .
பேசிய வார்த்தையால்
என்
உயிரையும் இழுத்தாய் .
நான்
ஒரு திசையாக வேண்டும் .
உன்
இதழ்கள் வழியாக சிந்தும்
கவிதைகள் எனக்கு
இசையாக வேண்டும் .
உன் முகம் செந்தாமரையின் மலர்ச்சி
என் மனதில் காதல் உணர்ச்சி .
காதலின் ஆழத்தை உணர்த்திட
என்னை
உன் மனதில் புதைத்திடு
காதல் விதையாக .
கரு கருநிற மேகத்தில்
கரைந்திடுவேனோ .
செந்நிற இதழால்
சிவந்திடுவேனோ.
கரு வெள்ளை பூக்களில்
கலந்திடுவேனோ.
- ம.சதீஷ்
Nice...
ReplyDelete