யாவும் நீயே
மரமாக நீ இருந்தால்
உன்னை
தாங்கும் வேறாக நான் இருப்பேன்
அலையாக நீ இருந்தால்
உன்னை
அனைக்கும் கரையாக நான் இருப்பேன்
மேகமாக நீ இருந்தால்
நீ சுதந்திரமாக சுற்றி திரிய
வானமாக நான் இருப்பேன்
பூவாக நீ இருந்தால்
உன்னை
உரசிச்செல்லும் காற்றாக நான் இருப்பேன்
புயலாக நீ இருந்தால்
உன்னுள்
அடங்கும் மண்ணாக நான் இருப்பேன்
சிற்பம் நீ என்றால்
உன்னை
செதுக்கும் உழியாக நான் இருப்பேன்
கவிதை நீ என்றால்
உன்னை
அலங்கரிக்கும் வார்த்தையாக நான் இருப்பேன்
உடல் நீ என்றால்
உன் உயிர் நானாவேன்
என் மனைவி நீ என்றால்
உன்
மகிழ்ச்சி நானாவேன் - ம.சதீஷ்
No comments:
Post a Comment